T20 போட்டிகளுக்கு சிக்கல்...! மீண்டும் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி குறைந்த அழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13) காலை 10.30க்கு வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா vs பாகிஸ்தான் மோதல்
இதேவேளை உலக கிண்ண போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பெப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பில் நடைபெற உள்ளது.

அதே நேரத்தில் இலங்கை பெப்ரவரி 16 ஆம் தேதி கண்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இரண்டு போட்டிகளுக்கும் அதிக கூட்டம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் குறித்த காலப்பகுதியில் வானிலை மாற்றங்களை ஏற்பாட்டாளர்கள் அணிகள் மற்றும் பார்வையாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |