இந்திய அரசின் புதிய இராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தை எதிர்த்து கடும் வன்முறை வெடிப்பு:ரயில்கள் எரிப்பு
இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் அக்னி பாதை என்ற திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பிஹார், உத்தரப் பிரதேச, தெலங்கானா மாநிலங்களில் பெரும் வன்முறைகள் ஏற்பட்டுள்ளன.
மேற்படி மாநிலங்களில் ரயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் இந்தியா முழுவதும் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. தெலங்கானா ரயில் நிலையத்தில் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Watch: Cops Push Coaches Away From Burning Train Amid '#Agnipath' Protests https://t.co/FFVmdk35fS
— NDTV (@ndtv) June 17, 2022
NDTV's Alok Pandey reports pic.twitter.com/FMQWYae0cw
8 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தெலங்கானா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய தடியடி, கண்ணீர் புகை குண்டு தாக்குதல் என்பன பலனளிக்காத நிலையில் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக இந்திய ரயில்வே துறையினர் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பிஹாரில் துணை முதல்வர் ரேணு தேவியின் வீடு தாக்கப்பட்டுள்ளது. மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கி சேதப்படுத்தினர்.
இதுபோன்ற வன்முறைகள் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது எனவும் போராட்டக்காரர்கள் இது சமூகத்திற்கான இழப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ரேணு தேவி தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவத்தின் தரைப்படை, கடற்படை, விமான படை ஆகியவற்று படையினரை தெரிவு செய்யும் அக்னி பாதை என்ற புதிய திட்டத்துக்கு இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய மாநிலங்கள் அவையின் உறுப்பினர் வை.கோ.,
இது தொழில் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அமர்த்தி, பின்னர் தூக்கி எறியும் நடைமுறை போன்று எனவும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை இந்திய படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழஙகாமல் 4 ஆண்டுகளில் தூக்கி வீசுகின்ற நடைமுறை எனவும் கூறியுள்ளார்.
இராணுவத்தின் மதிப்பையும், மரியாதையையும் குறைத்துவிடும். இந்திய இராணுவத்தை காவி மயம் ஆக்கவேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையை செயல்படுத்துவதற்கான மறைமுக திட்டமே அக்னி பாதை என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
இந்த திட்டத்தால் இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதை இந்திய ஒன்றிய அரசாங்கம் உணர்ந்து கொள்ளவேண்டும். எனவே அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் எனவும் வை.கோ கூறியுள்ளார்.
#Agnipath Protests | Protestors torch the Islampur - Hatia Express at Nalanda's Islampur railway station; 3 AC coaches burnt to ashes, several coaches damaged pic.twitter.com/D0Uq1dswfe
— NDTV (@ndtv) June 17, 2022