அன்று புலிகளுக்கு எதிராக அமெரிக்காவை திருப்பிய கோட்டாபய: மீண்டும் தலைதூக்கும் அதே நிலை
இலங்கை முற்றுமுழுதாக அமெரிக்கா பக்கம் சாய்ந்து கொண்டிருப்பதாக பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“2007 ஆம் கோட்டாபய ராஜபக்ச, இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ராபர்ட் ஓ. பிளேக் ஜூனியருக்கு முழு ஆதரவளித்து எவ்வாறு அவர்கள் தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக செயற்பட்டார்களோ அதே போலதான் தற்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முழுமையாக அமெரிக்க பக்கம் திரும்புவாராக இருந்தால் இலங்கையின் ஒட்டுமொத்த பிரச்சினையையும் அமெரிக்கா கையில் எடுக்கும்.
இந்த சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்யத்தான் தற்போது இந்தியா தமிழ் மக்களை தேர்ந்தெடுத்துள்ளது.
இதற்காகத்தான் அவசர அவசரமாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினருடைய குழுவை இந்தியா சந்தித்துள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |