இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு கடன் வசதி!! கைச்சாத்திடப்பட்டது ஒப்பந்தம் (படம்)
யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கான கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை இன்று இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் நிதியமைச்சின் செயலாளர் சிறிவர்தன EXIM Bank of India உடன் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
யூரியா உரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசிடம் இலங்கை அரசு கடன் வசதி கோரியிருந்தது.
இதற்கமைய, இந்தியாவில் இருந்து யூரியா உரம் கொள்முதல் செய்வதற்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதியை வழங்க இந்திய அரசு ஒப்புக்கொண்டது.
குறித்த ஒப்பந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்துகொண்டனர்.