இலங்கையில் இருந்து வெளியான செய்தியை கேட்டு கண்கலங்கினேன்! இந்திய வெளிவிவகார அமைச்சர் உருக்கம்
மருந்துத் தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்திய உதவியை வழங்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்று முற்பகல் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்வுப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அறுவை சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே தற்போது இடம்பெற்று வருவதாக பேராதனை வைத்தியசாலை வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் இது தொடர்பில் ஆராயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“இந்தச் செய்தியைக் கண்டு கலங்கினேன். இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பதைத் தொடர்புகொண்டு விவாதிக்குமாறு உயர் ஆணையர் பாக்லேயிடம் கேட்டுக்கொள்கிறேன்,” என ஜெய்சங்கர் இன்று ட்வீட் செய்துள்ளார்.
Disturbed to see this news. Am asking High Commissioner Baglay to contact and discuss how India can help.@IndiainSL #NeighbourhoodFirst https://t.co/jtHlGwxCBL
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 29, 2022

