இலங்கை : இந்திய கடற்படையினருக்கு இடையில் 33 ஆவது சர்வதேச கடல் எல்லை சந்திப்பு
இலங்கை மற்றும் இந்திய கடற்படையினருக்கு இடையில் 33 ஆவது சர்வதேச கடல் எல்லை சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
காங்கேசன்துறை வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்படையின் சுமித்ரா கப்பலில் கடந்த 03 ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடலோரப் பாதுகாப்பு
இந்து சமுத்திர பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளினதும் கடற்படைகள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு திணைக்களங்களுக்கு இடையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஆண்டுதோறும் இந்த சந்திப்பு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தற்போதுள்ள தகவல் தொடர்பு வலையமைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் இரு கடற்படைகளுக்கும் இடையே தகவல்களை சரியான நேரத்தில் பகிர்ந்துகொள்வது மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கைகளில் உதவுவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 1 மணி நேரம் முன்