பதவியை நிராகரித்த கூட்டமைப்பின் தலைவர்!
இந்திய - இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் பிரதித் தலைவர் பதவியை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்திய - இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்ச(Chamal Rajapaksa) தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் (R.Sampanthan) தெரிவு செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் அந்த பதவியை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய - இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றதுடன் அதில் 125 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் அண்மையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.