இலங்கைக்கு பச்சைக்கொடி காட்டிய இந்தியா
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் உறுதியளித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (23) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டத்தில் காணொளிக் காட்சி மூலம் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய - இலங்கை உறவு

இதேவேளை, இக்கூட்டத்தில் பங்கேற்ற இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, உணவுப் பாதுகாப்பு, வலுசக்திப் பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்டகால முதலீடுகள் ஆகிய நான்கு துறைகள் ஊடாக இந்திய - இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இதன்போது இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக பரிமாற்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சபாநாயகர், இந்தியா வழங்கிவரும் ஆதரவுகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட அங்கத்துவ உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் நாடதளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.





