மலைச்சரிவால் கிராமமே கல்லறையாகும் அவலம்!
இலங்கையை பேரழிவுடன் புரட்டிப்போட்ட திட்வா சூறாவளி இன்று நண்பகலுடன் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டாலும் இலங்கையில் இந்த பேரழிவை மையப்டுத்திய துன்பியல் செய்திகளும் காட்சிகளும் இன்னும் வலுவிழக்கவில்லை. மாறாக அவை அதிகரிக்கின்றன.
20,000 க்கு மேற்பட்ட மக்கள் வதிவிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 6 இலட்சம் ஹெக்டேயர் பயிர்செய்கை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
விவசாய நிலங்களின் அழிவில் கிழக்கு மாகாணம் மிகவும் மோசமாகவுள்ளது நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் காய்கறி பயிர்கள் அழிந்துவிட்டதால் இன்று ஒரு கிலோ கரட் 1000 ருபாவை தாண்டியது.
வெள்ளத்தில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல பகுதிகளில் மின்சார வலையமைப்புகள் சேதமடைந்துள்ளன.
200 க்கு மேற்பட்ட வீதிகள் அழிவடைந்துள்ளன. பல தொழிற்சாலைகள் இன்னமும் நீரில் மூழ்கியுள்ளன. இவ்வாறாக அழிவுகளின் பட்டியல் அதிகரிக்கிறது.
அனுர அரசாங்கம் திகைத்து நிற்கிறது. புனரமைப்புக்கான மதிப்பீடுகள் அதிர்ச்சியூட்டுவதாக நேற்று அனுரவே வாய்விட்டு கூறிவிட்டார்.
அதாவது ஏற்கனவே பொருளாதார ரீதியில் அடிவாங்கிய இலங்கைக்கு தனியாக இந்த பேரழிவில் இருந்து மீள்வது சாத்தியம் இல்லை என்ற விடயத்தை அவர் மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.
அப்படியானால், 2004 ஆழிப்பேரலைக்குப் பின்னர் இலங்கையை மையப்படுத்தி ஒரு சர்வதேச நன்கொடையாளர் மாநாடு வருமா? அவ்வாறு மாநாடு கூட்டப்பட்டால் பில்லியன் டொலர் மானியங்கள் கிட்டக்கூடிய அதேவேளை நாணய நிதியம் உட்பட்ட சர்வதேச கடனாளிகளுக்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் விதிகளிலிருந்து ஒரு தற்காலிக நிவாரணத்தையும் அடையலாம் என எண்ணும் அரசாங்கத்தின் நினைப்பு சரிவருமா?
இவை உள்ளிட்ட இலங்கை நிலவரங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு...........
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |