வடக்கு கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றங்களின் உத்தரவு
யாழ்ப்பாணம் நெடுந்தீவு மற்றும் மன்னார் கடற்பரப்புக்களில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டவேளை கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை அந்தந்த மாவட்ட நீதிமன்றங்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டன.
இதன்படி நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளுடன் 12 இந்திய கடற்தொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட் வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 05 ஆம் திகதி (05-03-2026) வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



