இந்திய இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த லண்டன் இளம்பெண் - பல லட்சங்களை இழந்தது எப்படி..!
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் லண்டனைச் சேர்ந்த இளம்பெண்ணின் மோசடிக்குள் சிக்கியுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரை சேர்ந்தவர் சூரஜ் பிரகாஷ் குர்ஜர் (31).
இவருக்கு முகநூல் மூலம் விக்டோரியா ஹஸ்டின் என்ற பெண் நட்பாகியுள்ளார். பின்னர் வாட்ஸ் அப் மூலம் மிகவும் நெருக்கமாகியுள்ளனர்.
லட்சக்கணக்கில் மோசடி
அவர் இந்தியாவுக்கு வர விரும்புவதாக சூரஜிடம் விருப்பம் தெரிவித்த நிலையில் லண்டனில் இருந்து டெல்லிக்கு வருவதற்கான விமான டிக்கெட் பெறுவதற்காக ஹசினாவுக்கு சூரஜ் பணத்தை அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 14ஆம் திகதி சூரஜுக்கு ஒரு அழைப்பு வந்தது, அதில் பேசிய பெண், உங்களின் தோழி விக்டோரியா டெல்லி விமான நிலையத்தில் இருக்கிறார்.
அவரிடம் ஐந்து கோடி மதிப்பிலான டிமாண்ட் டிராப்ட் உள்ளது. இதனால், அவர் கைது செய்யப்பட்டு, உடமைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விக்டோரியாவை விடுவிக்க பணம் கட்ட வேண்டும் என தொகையை கேட்க சூரஜ் வெவ்வேறு கணக்குகளில் ரூ. 7 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வரை அனுப்பியிருக்கிறார்.
மேலும் 15ஆம் திகதி விக்டோரியா ஜோத்பூருக்கு வந்துவிடுவார் எனவும் அப்பெண் சூரஜிடம் கூறினார். ஆனால் மீண்டும் 15ஆம் திகதி சூரஜுக்கு அழைப்பு எடுத்த அப்பெண், அவர் அனுப்பிய பணத்தை பரிமாற்றம் செய்யமுடியவில்லை என்று கூறினார்.
இது தொடர்பாக பிரித்தானிய நீதிமன்றத்தில் அனுமதி உத்தரவு பெற வேண்டும் எனக் கூறி மேலும் பணம் கேட்க சூரஜ் அந்தப் பெண் கூறிய கணக்கில் ரூ.4.79 லட்சத்தை வைப்புச் செய்துள்ளார்.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
இதன்பின் சூரஜுக்கு சந்தேகம் ஏற்பட்டு நண்பர்கள் உதவியுடன் டெல்லி விமான நிலையத்தில் விசாரித்தார். அப்போது தான் அது போன்று யாரையும் அதிகாரிகள் கைது செய்யவில்லை என தெரியவந்தது.
பின் தான் மிகப்பெரிய அளவில் மோசடி செய்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சூரஜ் இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் தொடர்கிறது.