இலங்கை எதிர்நோக்கும் பாரிய நெருக்கடி - கொழும்புக்கு விரைந்த இந்திய கப்பல் (படங்கள்)
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்திற் கொண்டு உடனடி உதவியாக 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இந்த டீசலை ஏற்றிய கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பலை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gamanpila) உள்ளிட்ட குழுவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இதன்போது, கருத்து தெரிவித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க முன்வந்திருந்ததாக குறிப்பிட்டார்.
எனினும், அந்த கடனை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆகியவற்றை சுட்டிக்காட்டி இந்தியாவிடம் இருந்து உடனடியான உதவிகளை கோரியிருந்தோம்.
இதனை கருத்திற்கொண்டு 40,00 மெற்றிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
#India - a committed partner and a true friend of #SriLanka. High Commissioner handed over 40,000 MT fuel consignment by @IndianOilcl to Hon'ble Energy Minister @UPGammanpila today. 🇮🇳🇱🇰partnership continues to work towards energy security of #lka. pic.twitter.com/BwPoTq7eAo
— India in Sri Lanka (@IndiainSL) February 15, 2022