திருகோணமலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்: வந்தடைந்த இந்திய நிவாரண கப்பல்

Trincomalee Sri Lanka India Weather Floods In Sri Lanka
By H. A. Roshan Dec 01, 2025 11:56 PM GMT
H. A. Roshan

H. A. Roshan

in சமூகம்
Report
🛑புதிய இணைப்பு

சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 22594 குடும்பங்களை சேர்ந்த 73388 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 25.11.2025 _2025.12.01 இன்று (01) மாலை 06.00 pm மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 620 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 17612 குடும்பங்களை சேர்ந்த 58440 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் நிவாரண நடவடிக்கையை ஆரம்பித்த ஐ.பி.சி தமிழ்...!

முல்லைத்தீவில் நிவாரண நடவடிக்கையை ஆரம்பித்த ஐ.பி.சி தமிழ்...!

தற்காலிக முகாம்

அத்தோடு, 73 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 4836 குடும்பங்களை சேர்ந்த 14480 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்: வந்தடைந்த இந்திய நிவாரண கப்பல் | Indian Ship Arrives Trinco Port Relief Supplies

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 521 குடும்பங்களை சேர்ந்த 1849 நபர்களும், தம்பலகாமம் 450 குடும்பங்களை சேர்ந்த 1421 நபர்களும்,மொறவெவ 135 குடும்பங்களை சேர்ந்த 420 நபர்களும்,சேருவில 805 குடும்பங்களை சேர்ந்த 2287 நபர்களும், வெருகல் 1880 குடும்பங்களை சேர்ந்த 5607 நபர்களும்,மூதூர் 6941 குடும்பங்களை சேர்ந்த 22378 நபர்களும்,கிண்ணியா 5007 குடும்பங்களை சேர்ந்த 16446 நபர்களும், கோமரங்கடவல 304 குடும்பங்களை சேர்ந்த 942 நபர்களும் , பதவிஸ்ரீபுர 533 குடும்பங்களை சேர்ந்த 1802 நபர்களும், குச்சவெளி 5732 குடும்பங்களை சேர்ந்த 19255 நபர்களும் மற்றும் கந்தளாய் 286 குடும்பங்களை சேர்ந்த 981 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதுடன் மீட்பு நடவடிக்கைகளில் முப்படையினர்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன் வான்வழி மூலமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவையினை படையினர் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு துன்பம் நேருமாயின் இந்தியா களத்தில் இறங்கும்!

இலங்கைக்கு துன்பம் நேருமாயின் இந்தியா களத்தில் இறங்கும்!

இலங்கைக்கு உதவி கரம் நீட்டிய மற்றுமொரு சர்வதேச நாடு...!

இலங்கைக்கு உதவி கரம் நீட்டிய மற்றுமொரு சர்வதேச நாடு...!

🛑 முதலாம் இணைப்பு

இந்தியாவிலிருந்து நிவாரண கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

திருகோணமலை இயற்கைத் துறை முகத்தை நேற்று (01) குறித்த கப்பல் வந்தடைந்துள்ளது.

இந்திய நாட்டின் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் இதில் வந்து கிடைத்துள்ளது.

அடித்து கொல்லப்பட்டாரா இம்ரான் கான் : பாகிஸ்தான் அரசின் அறிவிப்பு

அடித்து கொல்லப்பட்டாரா இம்ரான் கான் : பாகிஸ்தான் அரசின் அறிவிப்பு

சீரற்ற கால நிலை

சீரற்ற கால நிலை திட்வா சூறாவெளி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக இந்த நிவாரண பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதில் அத்தியவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் என முக்கிய உபகரணங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருகோணமலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்: வந்தடைந்த இந்திய நிவாரண கப்பல் | Indian Ship Arrives Trinco Port Relief Supplies

இதனை கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்தலால் ரட்ணசேகர, பிரதியமைச்சர் அருண்ஹேமச்சந்திர, மாவட்ட செயலாளர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார, மாகாண பிரதம செயலாளர் தலங்கம மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி உள்ளிட்டோர்கள் இணைந்து இதனை பெற்றுக் கொண்டனர்.

இதனை யாழ்ப்பாண இந்திய துணை தூதுவர் சாய் முரளி வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்டை சேர்ந்தவாரா நீங்கள்...! ரஷ்யா வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

இந்த நாட்டை சேர்ந்தவாரா நீங்கள்...! ரஷ்யா வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

நாடு கடத்த உதவினால் இலவச பீர் சலுகை: அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

நாடு கடத்த உதவினால் இலவச பீர் சலுகை: அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021