இந்திய துணை ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நுவரெலியா சென்றுள்ளார்.
அதன்போது, அவரை நுவரெலியாவில் வைத்து பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வரவேற்றுள்ளார்.
அதனைதொடர்ந்து, இந்திய அரசின் நன்கொடையில் ராகலை லிடெஸ்டேல் சூரியகாந்தி தோட்ட பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டு திட்டங்களையும் துணை ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.
விசேட சமய வழிபாடுகள்
குறித்த விஜயத்தின் போது அவர், மலையகத் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி, சந்திப்பின் மூலம் மலையக மக்களின் தேவைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நுவரெலியாவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதை அம்மன் ஆலயத்திற்கு செல்லும் துணை ஜனாதிபதி, அங்கு நடைபெறும் விசேட சமய வழிபாடுகளிலும் பங்கேற்கவுள்ளார்.
இவரது இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அவர் தமது உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவுசெய்து, இன்று பிற்பகல் இலங்கையிலிருந்து புறப்பட உள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |