திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்திய நாசகார போர் கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலான ‘INS ராணா’ இன்று காலை (ஓகஸ்ட் 11, 2025) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது, சிறிலங்கா கடற்படை அந்தக் கப்பலை கடற்படை மரபுகளின்படி வரவேற்றது.
இந்த நாசகார கப்பல் 147 மீட்டர் நீளம் கொண்டதுடன் 300 பணியாளர்களைக் கொண்டுள்ளது, மேலும் கப்டன் கே.பி. ஸ்ரீசன் கப்பலின் கட்டளை அதிகாரியாக உள்ளார்.
பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சி
‘INS ராணா’ என்ற கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படை ஏற்பாடு செய்யும் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தினருக்கு கப்பலில் யோகா நிகழ்ச்சி
அத்துடன் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சிறிலங்கா இராணுவத்தினருக்கு 'INS ராணா' கப்பலில் யோகா நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் பயிற்சி நிகழ்ச்சிகள் திருகோணமலை சிறப்பு படகுப் படை தலைமையகத்திலும் கப்பலிலும் நடைபெறும்.
மேலும், 'INS ராணா' தனது அதிகாரபூர்வ சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஓகஸ்ட் 14, 2025 அன்று நாட்டை விட்டுப் புறப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
