இலங்கையில் இந்தியாவின் அரசியல் நகர்வு அம்பலம்
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Janatha Vimukthi Peramuna
India
By Sumithiran
a year ago
இலங்கையில் தமது கட்சியின் அரசாங்கம் வரும் என்ற நம்பிக்கையில் தேசிய மக்கள் சக்தியுடன் இந்தியா இணைந்து செயற்படுவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக நாம் கருத்து கூறுவது என்ற விடயம் தவறானது. ஒரு நாட்டை எப்படி எதிர்க்க முடியும் நாம் அப்படி இருக்க முடியாது.
கவலைப்படத் தேவையில்லை
எனவே இதைப் பற்றி எங்கள் எதிரிகள் வருத்தப்படுவதைப் பற்றி நாங்கள் கவலைப்படத் தேவையில்லை' என்று அவர் கூறினார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்தியாவில் அநுர குமார
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க அங்கு பல்வேறு தலைவர்களையும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி