வெடித்துச் சிதறியது இந்தோனேசிய நீர்மூழ்கி - அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
பாலிக் கடற்பரப்பில் காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பல் மூன்று துண்டுகளாக சிதறிய நிலையில் கடலுக்குள் காணப்படுவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினமே 800 அடி ஆழத்திலிருந்து நீர்மூழ்கியின் சமிக்ஞை கிடைத்தது என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிதைவுகளை படம்பிடிப்பதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த கடலுக்கு அடியில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனத்தை அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீர்மூழ்கியிலிருந்து மேலும் பல பொருட்களை மீட்டுள்ளோம், நங்கூரம் மற்றும் அதிலிருந்தவர்கள் பயன்படுத்திய பாதுகாப்பு உடைகள் ஆகியவற்றை மீட்டுள்ளோம் என அங்கிருக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கே.ஆர்.ஐ நங்கலா என்ற நீர்மூழ்கி மூன்று துண்டங்களாக காணப்படுகின்றது. முக்கிய பகுதி வெடித்த நிலையில் காணப்படுகின்றது என கடற்படைத் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
