மகிந்தவின் எச்சரிக்கையால் புலிகளிடமிருந்து தப்பிய முன்னாள் அமைச்சர்!
முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர தொலைத்தொடர்பு தபால் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பதுளையில் வைத்தே அவரை கொலை செய்ய விடுதலைப் புலிகள் முயற்சித்ததாகவும் ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினாலேயே அங்கிருந்து அவர் உயிர் தப்பியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இந்த விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
எனினும், மூன்று நாட்களின் பின்னர் மாத்தறை அகுறஸ்சையில் இடம்பெற்ற மீலாதுன் நபி தின வைபவமொன்றின் போது மாத்தறை கொடபிட்டிய முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் மகிந்த விஜேசேகர சிக்கியதாகவும் சாமர குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை
இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறுகையில், “தெமோதரவில் புதிதாக தபால் நிலையம் ஒன்றை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அன்றிருந்த தபால் துறை அமைச்சரான மகிந்த விஜேசேகர பதுளைக்கு வருகை தந்திருந்தார்.குறித்த நிகழ்வை நானே ஏற்பாடு செய்திருந்தேன்.
பதுளைக்கு வந்தவரை அன்று 12 மணியளவில் எல்ல விடுதியில் தங்க வைத்தேன்.முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதுளை அலுவலகத்தில் இருந்தார்.
இச்சந்தர்ப்பத்தில் நிமல் சிறிபால டி சில்வா 1 மணி போல் என்னை அழைத்து அலுவலகத்திற்கு வர சொன்னார்.
நான் அங்கு சென்ற போது, விடுதலைப் புலிகள் பதுளைக்கு வந்திருப்பதாகவும் இருவரின் உயிருக்கும் ஆபத்து என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் தெரிவித்ததாகவும் கூறினார்.
தற்கொலை குண்டு தாக்குல்
இதன்காரணமாக அப்போது முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகரவை விடுதியில் இருந்து வெளியில் வர வேண்டாம் எனவும், நிமல் சிறிபால டி சில்வாவை அலுவலகத்திலே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், நிமல் சிறிபால டி சில்வா, “சாமர தபால் மா அதிபர் திசாநாயக்க வருவார் நீர் சென்று அடிக்கல்லை நாட்டு” என தெரிவித்தார், நான் திருமணம் முடித்து ஒரு வருடம் மனைவியும் கர்ப்பிணியாக இருந்தார்.
பின்னர் நான் சென்று நிகழ்வை நடத்தி முடித்தேன். அதற்கு பின்னர் மூன்று நாட்களின் பின்னரே அவர் தற்கொலை குண்டு தாக்குலில் சிக்கினார்.இதெல்லாம் உண்மையான சம்பவங்கள்.
அவ்வாறான சூழநிலையில் தான் நாட்டில் வேலை செய்தோம்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு தற்போது அப்படியொரு சூழ்நிலை இல்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
