சற்றுமுன்னர் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இரண்டாம் இணைப்பு
எரிபொருள் விநியோகம் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆரம்பிக்கப்படும் என பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் லிமிடெட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமைதியின்மை காரணமாக, எரிபொருள் தாங்கி ஊர்திகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் விநியோகத்தை தாம் உடனடியாக நிறுத்தியதாக அவர் குறிப்பிட்டுளார்.
எனினும் தாங்கிகளை விடுவிப்பதற்கான பாதுகாப்பு அங்கீகாரம் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமை கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றிரவு நாட்டின் சில பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதுடன், ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதுடன், நீர்கொழும்பிலும் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவங்கள் காரணமாக கடந்த திங்கட்கிழமை (09) நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளைய தினம் வியாழக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.