எரிபொருள் கையிருப்பு தொடர்பில் அபாய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
நாட்டில் தடையற்ற எரிபொருள் விநியோகத்திற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே உத்தரவாதம் அளிக்க முடியும் என்று அமைச்சர் உதய கம்மன்பில (Udayagamanpila)சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தேவைகளுக்காக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் நிதி இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் கம்மன்பில நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு(Basil Rajapaksa) அறிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு அவர் நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தீர்வு வழங்கப்படாவிட்டால், அமைச்சு கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும், எரிபொருள் இறக்குமதியை நிறுத்தி வைக்க வேண்டி ஏற்படும் என்றும் நிதி அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிசக்தி அமைச்சர் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் - ஏற்படும் பெரும் இழப்பை ஈடுகட்ட வேண்டும் மற்றும் விலை உயர்வு அனுமதிக்கப்படாவிட்டால், திறைசேரியால் மானியம் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிததுள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் ரூ .83 பில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளது மற்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ .120 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இம்மாதம் 21 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால், எரிபொருளுக்கான தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது, அப்படியானால், இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்துக்கு இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் போதுமானதாக இருக்காது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.