வரிப்போரில் திருப்பம்: ட்ரம்ப்-ஜின்பிங் தொலைபேசி பேச்சு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் (Donald Trump) சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும் (Xi Jinping) தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வுதெச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் சீனா இடையில் வர்த்தகப் போர் நடைபெற்று வரும்நிலையில் இவ்வாறான ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார்.
பங்குச்சந்தைகள்
இதையடுத்து, சீனா மீது 34 சதவிகித வரியை விதித்ததுடன் அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது.
இந்த வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவிதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவிகித வரியும் உயர்த்தும் அளவுக்கு கொண்டு சென்றது.
இதனால், உலகளவிய பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டதுடன் இறுதியாக, இரு நாடுகளும் 90 நாள்களுக்கு வரி விதிப்பை ஒத்திவைப்பதாக பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டன.
இருப்பினும், ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக, அவ்விரு நாடுகளும் குற்றஞ்சாட்டிக் கொண்டன.
பேச்சுவார்த்தை
இதனிடையே, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது.
இதுகுறித்து, ட்ரம்ப் கருத்து தெரிவிக்கையில், “சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை எப்போதுமே பிடிக்கும்.
அது எப்போதும் தொடரும் இருப்பினும், அவர் மிகவும் கடினமானவர் அதிலும், அவருடன் ஒப்பந்தம் மேற்கொள்வது என்பது மிக மிகக் கடினமானது” என அவர் தெரிவித்துள்ளார்.
இருவரும் வியாழக்கிழமையில் மேற்கொண்ட பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
