புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் : மூன்று பேர் கைது!
Arrested
Negombo
Intelligence
Kochchikade
Fake PCR report
By MKkamshan
போலி PCR அறிக்கைகளை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு - கொச்சிக்கடை பொரதொட்ட பிரதேசத்தில் இன்று காலை போலி PCR அறிக்கைகளை தயாரித்து விற்பனை செய்யும் இடம் ஒன்றை சுற்றிவளைத்த காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, விசேட அதிரடிப்படையினர் குறித்த இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து 17 போலி PCR அறிக்கைகள் மற்றும் முத்திரையிடப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களையும் கைப்பற்றியதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்களுக்காக சந்தேக நபர்கள், இவ்வாறு போலி PCR அறிக்கைகளை தயாரித்து வழங்கி வந்துள்ளனர்.
தாயுமான தலைவன்…! 2 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி