இலங்கையின் பிரசித்தமான கட்டட நிர்மாணங்களின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை
இலங்கையை உலக அரங்கிற்கு கொண்டுசென்ற பிரசித்தமான நிர்மாணங்களான ருவன்வெலிசாய, அபயகிரிய, ஜேதவனாராமய உள்ளிட்ட நிர்மாணங்கள் ஊடாக இந்நாட்டு கலைஞர்கள் உருவாக்கிய தரத்தை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும், அதற்கு அவசியமான வசதிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதெனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதேபோல், எதிர்கால காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு உகந்ததான கட்டிட நிர்மாணங்கள் இலங்கைக்கு அவசியப்படுவதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
கொழும்பு சினமன் கிரேண்ட ஹோட்டலில் இன்று (05) நடைபெற்ற கட்டிடக் கலைஞர்களின் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரமிக்கத்தக்க நிர்மாணங்கள்

சிகிரியா இந்நாட்டின் பிரமிக்கத்தக்க அதேபோல் வாஸ்து சாஸ்திரத்திற்கு அமைவான நிர்மாணமாகும்.
பொலன்னறுவையில் காணப்படும் பிரமிக்கத்தக்க நிர்மாணங்களும் 2000 வருட வரலாற்று பாரம்பரியத்தை கொண்டவையாகும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க, தெரிவித்தார்.
அதேபோல், 19 ஆம் நூற்றாண்டின், கண்டி திரித்துவக் கல்லூரி ஷெபல் அரங்கம், களனி விகாரை, லேக் ஹவுஸ் கட்டிடம், பேராதனைப் பல்கலைக்கழகம், சுதந்திர சதுக்கம், ஜெப்ரி பாவா நிர்மாணித்த இலங்கைப் பாராளுமன்றம் ஆகியனவும் இலங்கையின் பிரம்மிக்கதக்க படைப்புக்களின் சிலவாக விளங்குகின்றன.
கடந்த இரு வருடங்களில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் கட்டிட நிர்மாணத்துறையும் பாதிப்புக்களை எதிர்கொண்டது. நிர்மாணத்துறையில் ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழந்தனர்.
சரியான நகர திட்டமிடல்கள் ஊடாக அனைத்து நகரங்கயைும் அழகிய நகரங்களாக மாற்றியமைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.