ஈரான் வான்வெளி திறப்பு: மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து ஆரம்பம்
இருபது நாட்களுக்கு பிறகு ஈரானில் (Iran) மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மற்றும் இஸ்ரேல் (Israel) இடையே சுமார் 12 நாட்கள் நடந்த மோதல் நீடித்த நிலையில், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதனை தொடர்ந்து ஈரானும் மற்றும் இஸ்ரேலும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து இந்த மோதல் முடிவுக்கு வந்தது.
விமான போக்குவரத்து
இதனையடுத்து, போர் பதற்றம் காரணமாக ஈரானில் சர்வதேச விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சுமார் இருபது நாட்களுக்கு பிறகு ஈரானில் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
புறப்பட்ட விமானம்
இதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஈரானில் இன்று (04) தரையிறங்கியதாக ஈரானின் விமான போக்குவரத்து துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஈரானின் விமான போக்குவரத்து துறையின் ஸ்திரத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுடனான சமீபத்திய போர் பதற்றங்களுக்கு பிறகு, இஸ்ரேல் தனது வான்வெளியை அமைதியாகவும் மற்றும் புத்திசாலித்தனமானகவும் நிர்வகித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
