பாகிஸ்தானில் இருந்து வெளியான முதல் அறிக்கை! ஹோர்முஸை நோக்கி படையெடுத்த சர்வதேச கப்பல்கள்
பாகிஸ்தான் தலைநகரில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கவிருப்பதால், பல கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக சர்வதேச கப்பல் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
MarineTraffic தளத்தினை மேற்கோள்காட்டி வெளியாகிய செய்தியில் குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்த கப்பல்களில் பெரும்பாலானவை சீனாவைச் சேர்ந்தவை என்றும் அவை நீரிணையை கடந்துள்ளன எனவும் தரவுகள் காட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சீன சரக்குக் கப்பல்
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு இறுதியாக ஈராக்கின் உம் காஸ்ர் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஒரு சீன சரக்குக் கப்பல், இரவோடு இரவாக அவ்வழியே கடந்து சென்றது.

இந்நிலையில் தற்போது தலா சுமார் 300,000 தொன் கொள்ளளவு கொண்டதும், சரக்குகள் நிரம்பியதாகக் காட்டப்பட்டதுமான இரண்டு சீன கச்சா எண்ணெய் கப்பல்கள் நீரிணையை கடந்து சென்றதாக தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
எனினும் போக்குவரத்து, வழக்கமான அளவை விட ஒரு சிறு பகுதியாகவே உள்ளது என்றும் அதாவது ஒரு நாளைக்கு சுமார் 100 கப்பல்கள் என்ற கணக்கில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அன்று ட்ரம்ப், "ஹோர்முஸ் வழியாக எண்ணெய் செல்ல அனுமதிப்பதில் ஈரான் மிகவும் மோசமான, சிலர் கண்ணியமற்ற ஒரு செயலைச் செய்கிறது" என்று கூறினார்.
இஸ்லாமாபாத்திலிருந்து அறிக்கை
“அது நாம் செய்துகொண்ட ஒப்பந்தம் அல்ல!” என ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இவ்வாறான நிலையில் லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதல்கள் உட்பட, அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக தெஹ்ரான் கூறும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, "ஹோர்முஸ் வழியாக எண்ணெய்க் கப்பல்கள் செல்வதற்கான தற்போதைய நிபந்தனைகளை ஈரான் பராமரித்து வருகிறது" என்று ஈரானின் அரை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம், இன்று சனிக்கிழமை இஸ்லாமாபாத்திலிருந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், தனது அனுமதியுடன் மட்டுமே கப்பல்கள் ஜலசந்தி வழியாகச் செல்ல முடியும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |