நெதன்யாகுவின் வலையில் சிக்கிய ட்ரம்ப் : உண்மையை போட்டுடைத்த அமெரிக்க முன்னாள் செயலாளர்
ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்துமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முந்தைய அமெரிக்க நிர்வாகங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதாகவும், ஆனால் முந்தைய ஜனாதிபதிகள் அதை மறுத்துவிட்டதாகவும் முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார்.
நேற்று (11) வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் பேசிய கெர்ரி, நெதன்யாகுவுடன் பல கலந்துரையாடல்களில் பங்கேற்றதாகக் கூறினார்.மேலும், "நாங்கள் தாக்குதல் நடத்த வேண்டும் என்று அவர் விரும்பினார்" என்றும் குறிப்பிட்டார்.
நெதன்யாகுவின் திட்டத்தை நிராகரித்த முன்னாள் ஜனாதிபதிகள்
இஸ்ரேலியப் பிரதமர் இந்தத் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் நேரடியாக முன்வைத்தார் என்றும், "ஜனாதிபதி ஒபாமா மறுத்துவிட்டார். ஜனாதிபதி ஜோ பைடன் மறுத்துவிட்டார். ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மறுத்துவிட்டார்" என்றும் அவர் கூறினார்."வெளிப்படையாக, இதற்கு ஒப்புக்கொண்ட ஒரே ஜனாதிபதி ட்ரம்ப் மட்டுமே" என்று கெர்ரி குறிப்பிட்டார்.

image credit -cnn
சமீபத்திய செய்திகளைக் குறிப்பிட்டு, இராணுவ நடவடிக்கைக்கான விரிவான வாதத்தை நெதன்யாகு முன்வைத்ததாகவும், அதை "நான்கு அம்சத் திட்டம்" என்று விவரித்ததாகவும் கெர்ரி கூறினார்.
நெதன்யாகுவின் நான்கு அம்சத்திட்டம்
அத்தகைய தாக்குதல் "தலைமையைக் கொல்லும்", "ஆட்சி மாற்றத்தைத் தூண்டும்", மற்றும் "இராணுவத்தை அழிக்கும்" போன்ற வாதங்கள் அந்தத் திட்டத்தில் இடம்பெற்றிருந்ததாக அவர் தெரிவித்தார். விவாதங்கள் குறித்த செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்தவையாகத் தோன்றியதாகவும், அது "நல்ல செய்தியாகத் தெரிகிறது" என்றும் கெர்ரி கூறினார்.

மேலும், மூத்த அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டங்களில் நெதன்யாகு இந்த வாதங்களை முன்வைத்ததாகவும், அங்கு மாறுபட்ட கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |