தீவிரமடையும் ஷிரந்திக்கு எதிரான சிரிலிய நிதி முறைகேடுகள் விசாரணை

CID - Sri Lanka Police Sri Lanka
By Dharu Sep 14, 2026 02:04 AM GMT
Report

விளையாட்டு அமைச்சுக்கு தேவையான பேருந்துகளை இறக்குமதி செய்வதாகக் கூறி, பல கோடி ரூபாய் பெறுமதியான வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு சொகுசு பேருந்துகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் கீழ் நடத்தப்படும் கார்ல்டன் முன்பள்ளிக்கு வழங்கியதாகக் கூறப்படும் இந்த ஊழல் மற்றும் நிதி முறைகேடுகளை மையப்படுத்தியே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்குத் தொடருவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதனடிப்படையில் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவும் முறையான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள் தள்ளிய சஜித் பிரேமதாச தரப்பின் ஆட்சிக்காலம்!

மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள் தள்ளிய சஜித் பிரேமதாச தரப்பின் ஆட்சிக்காலம்!

100 மில்லியன் ரூபாய் தொகை

இதேவேளை, சிரிலிய சவிய அல்லது சிரிலிய அறக்கட்டளை, ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பெண்கள் அமைப்பு எனக் காட்டி இந்த நிதி முறைகேடு மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தீவிரமடையும் ஷிரந்திக்கு எதிரான சிரிலிய நிதி முறைகேடுகள் விசாரணை | Investigat Into Financial Irregularities Siriliya

இதுதொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் தொகை சிரிலிய அறக்கட்டளையால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு தனியான விசாரணையை ஆரம்பித்துள்ளது.

கொழும்பு ரிஜ்வே ஆதார சிறுவர் வைத்தியசாலைக்கு CT ஸ்கேன் இயந்திரமொன்றை வழங்குவதற்காக நிதி தேவைப்படுவதாக சிரிலிய அறக்கட்டளை முன்வைத்த கடிதத்தின் அடிப்படையில், உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளாமல் அப்போதைய தேசிய சேமிப்பு வங்கியின் தலைவரின் வாய்மொழி உத்தரவின் பேரில் அந்தப் பணம் வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அந்த நிதியில் CT ஸ்கேன் இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டதாகக் காட்டி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த இயந்திரம் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜபக்ச - ரணில் இடையே வரலாறு படைக்கும் ஒரு போட்டி...

ராஜபக்ச - ரணில் இடையே வரலாறு படைக்கும் ஒரு போட்டி...

சட்டமா அதிபரின் ஆலோசனை

எனினும், குறித்த CT ஸ்கேன் இயந்திரம் உண்மையில் சீன அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் நிதியைப் பயன்படுத்தியே பெறப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

தீவிரமடையும் ஷிரந்திக்கு எதிரான சிரிலிய நிதி முறைகேடுகள் விசாரணை | Investigat Into Financial Irregularities Siriliya

இதுதொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ள நிலையில், சிரிலிய அறக்கட்டளையின் தலைவரான ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டியவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று, விசாரணைகளை நிறைவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் காரியவசம் உள்ளிட்டோரிடம் இதுவரை பெறப்பட்ட வாக்குமூலங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அந்த வாக்குமூலங்களை சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் குழு தற்போது ஆய்வு செய்து வருவதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026