யாழில் உருவாகியுள்ள தீடிர் பணக்கார்களுக்கு நெருக்கடி...! NPP கைகளில் பட்டியல்
வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் இருப்பதாகவும் அவர்களுடைய பட்டியலை தரவா எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா காவல்துறையினரை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.
வலி. மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இன்றைய (30-01-2026) கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் எல்லாம் இருக்கின்றார்கள், எங்களுக்கு தெரியும்.
பணக்காரர்கள்
அவர்கள் எப்படி திடீர் பணக்காரர்கள் ஆனார்கள், காவல்துறையினர் எவ்வாறு அவர்களுடன் நல்லுறவில் இருக்கின்றனர் என மக்கள் காணொளி ஆதாரத்துடன் எமக்கு தந்துள்ளார்கள்.
இந்தநிலையில், திடீரென பணக்காரர்களுக்கு எதிராக நாங்கள் திடீர் நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கின்றோம்.

சங்கானை பிரதேச செயலர் பிரிவிலும் திடீரென பணக்காரர்கள் உருவாகியுள்ளார்கள் என எமக்கும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
எனவே அவ்வாறானவர்கள் குறித்தான தகவல்களை மேலும் எங்களுக்கு வழங்குங்கள்.
எங்களுக்கு கிடைத்த தகவல்களை நாங்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம், அவர்கள் அது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
காவல்துறையினருக்கு முகவர்கள் இருக்கின்றனர், நாங்கள் அது குறித்து அவதானித்துக்கொண்டு தான் இருக்கின்றோம்”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |