மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்...
india
ipl
dubai
sarjah
By Vanan
ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
14ஆவது ஐ.பி.எல். தொடரின் 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 4 அணிகளின் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து மே 4ஆம் திகதி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் குறையாத காரணத்தால் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ தலைவர், கங்குலியுடனான கூட்டத்திற்கு பின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது,
மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10ஆம் திகதிக்குள் டுபாய், சார்ஜா மற்றும் அபுதாபியில் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.