RCB - RR-ஐ குறி வைத்த அமெரிக்க கோடீஸ்வரர்: முதலீட்டாளர்களிடையே வெடித்த ஏலப்போர்
ஐபிஎல் (IPL) கிரிக்கெட் அணிகளின் பெரும்பான்மை பங்குகளைக் கைப்பற்ற அமெரிக்கக் கோடீஸ்வரர் டேவிட் பிளிட்சர் (David Blitzer) ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது உலகளாவிய முதலீட்டாளர்களிடையே ஒரு பாரிய ஏலப் போரை உருவாக்கியுள்ளது.
தற்போதைய தகவல்களின்படி, நடப்பு சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ஆகிய அணிகளின் பங்குகளை வாங்க பிளிட்சர் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
அணியின் மதிப்பு
கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஆர்.சி.பி அணியின் மதிப்பு தற்போது சுமார் 1.8 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் பிளிட்சருடன் இணைந்து மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர் அவ்ராம் கிளேசர், அதார் பூனவல்லா மற்றும் ரஞ்சன் பை போன்ற பிரபல இந்தியத் தொழிலதிபர்களும் களம் இறங்கியுள்ளனர்.

ஐபிஎல் தொடரின் ஒட்டுமொத்த மதிப்பு கடந்த ஆண்டு 18.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதால் பிளாக்ஸ்டோன் மற்றும் கே.கே.ஆர் (KKR) போன்ற சர்வதேச முதலீட்டு நிறுவனங்களும் இதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்த இறுதி ஏலத்திற்கான காலக்கெடு மார்ச் மாத நடுப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய ஐபிஎல் பருவம் 84 போட்டிகளுடன் மார்ச் 26 அன்று தொடங்கவுள்ள நிலையில் இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) அனுமதி கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |