இலங்கை அணியின் படுதோல்விக்கான காரணம்! அணி தலைவர் பகிரங்கம்
இலங்கை கிரிக்கெட் அணியின் சமீபத்திய தோல்விகள் குறித்து அணித்தலைவர் தசுன் ஷானக்க கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது, அணியைச் சுற்றி நீண்டநாளாக அதிகமான வெளிப்புற எதிர்மறை விமர்சனங்கள் நிலவியதாகவும், சில போட்டிகளில் ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, முக்கிய வீரர்கள் சிலர் எதிர்கொண்ட உடற்தகுதி சிக்கல்களும் அணியின் செயல்திறனை பாதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கடும் எதிர்ப்பு
ரி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை 61 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.அந்தத் தோல்வியுடன், அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்த முதல் அணியாகவும் இலங்கை மாறியது.

கடந்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றிகளை பெறத் தவறிய இலங்கை அணி, உலகக் கிண்ணத்துக்கு முன்பே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்திருந்தது.
எதிர்மறையான கருத்துகள்
“நாம் பலமுறை காண்பதும் கேட்பதும் எதிர்மறையான கருத்துகள்தான். வீரர்களாக நாம் நேர்மறையாக இருக்க முயன்றாலும், வெளியில் நிலவும் சூழல் வேறுபட்டதாக இருக்கிறது,” என ஷானக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்த அவர், மைதானத்திற்கு வெளியே இருந்து பலரும் பலவிதமான கருத்துகளை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.
இந்த உலகக் கிண்ண தொடரில் சிம்பாப்வே, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தொடர்ந்து தோல்வியடைந்த இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் அணியைச் சுற்றிய விமர்சனங்கள் மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |