அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை: சொந்த மண்ணில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தீர்மானமிக்க போட்டியில் இலங்கை அணி 61 ஓட்டங்களால் தோல்வியடைந்து, அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (25) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி
அந்த அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா 32 ஓட்டங்களையும், அதிரடியாக விளையாடிய மிட்செல் சென்ட்னர் 47 ஓட்டங்களையும் மற்றும் கோல் மெக்கொன்சி 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஸன மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

169 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பாடிய இலங்கை அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் (31) மற்றும் துனித் வெல்லாலகே (29) ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றனர்.
இந்தத் தோல்வியின் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இலங்கை அணி உத்தியோகபூர்வமாக இழந்துள்ளமை ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |