குவைத் - ஈரான் இடையே பெரும் பதற்றம்! நாட்டை விட்டே வெளியேற்றப்பட்ட ஈரானிய அதிகாரிகள்
குவைத் மீது தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குவைத் நிலப்பரப்பு மற்றும் சிவிலியன் உள்கட்டமைப்புகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குவைத்தில் உள்ள ஈரானிய தூதரகப் பொறுப்பாளர் ஹமீத் யாகூபி ஃபார் என்பவரை குவைத் வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
அத்துடன், குவைத்தில் உள்ள ஈரானிய தூதரகத்தின் இரண்டு அதிகாரிகளை அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு குவைத் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச சட்ட மீறல்
மேலும், குவைத்தில் உள்ள ஈரானிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Image Credit: The Assam Tribune
இது குறித்துப் பேசிய குவைத் துணை வெளியுறவு அமைச்சர் ஹமாத் சுலைமான் அல்-மஷான், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரான் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல், குவைத்தின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் அப்பட்டமாக மீறும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கும் எதிரானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் குற்றச்சாட்டுகள்
குவைத் நிலப்பரப்பு அல்லது வான்வெளியைப் பயன்படுத்தி அமெரிக்கா தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை குவைத் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஈரானின் இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று கூறிய துணை அமைச்சர் அல்-மஷான், எந்தவொரு நாட்டிற்கும் எதிரான விரோதப் போக்கிற்குத் தனது நிலப்பரப்பையோ அல்லது வான்வெளியையோ பயன்படுத்துவதை குவைத் ஒருபோதும் அனுமதிக்காது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்