200 படைவீரர்கள் தங்கியிருந்த அமெரிக்க தளத்தை தாக்கிய ஈரான்! அதிர்ந்த சவூதி அரேபியா
சவூதி அரேபியாவின் அமெரிக்காவின் அல் கர்ஜ் விமானப்படைத் தளத்தில், ஈரான் பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
200 படைவீரர்கள் தங்கியிருந்த தளத்தில் உள்ள பணியாளர்களின் தங்குமிடத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) வான்படை கட்டளை தளபதி தெரிவித்துள்ளார்.
ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தனது படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க விமானப் பணியாளர்கள்
தனது X கணக்கில் பதிவிட்ட ஒரு பதிவில் பிரிகேடியர் ஜெனரல் மஜித் மூசாவி, அமெரிக்க விமானப் பணியாளர்கள் கூடியிருந்த இடத்தை இந்தத் தாக்குதல் வெற்றிகரமாகத் தாக்கியதாகக் கூறியுள்ளார்.

"இன்று, சவூதி அரேபியாவின் அல் கர்ஜில் உள்ள அமெரிக்க விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் தங்குமிடத்தை, ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி நாங்கள் தாக்கினோம். இதில் 200 பேர் கூடியிருந்த இடம் தாக்கப்பட்டது.
தற்போது, AWACS விமானங்கள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் எரிபொருள் கிடங்குகள் மீதான தாக்குதல்களுக்கு மேலதிகமாக, விமானப் பணியாளர்கள் மத்தியில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்களின் பட்டியலும் ட்ரம்ப் மற்றும் ஹெக்ஸெத்தின் இழப்புகள் மற்றும் சேதங்களின் பட்டியலில் உள்ளது” என மஜித் மூசாவி கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்