அமெரிக்க தளபதிகள் கூடும் இரகசிய இடத்தை தாக்கிய ஈரான்! இஸ்ரேலிலும் விழுந்த ஏவுகணைகள்
கடந்த சில நிமிடங்களில் ஈரான் மத்திய இஸ்ரேல் மீது பாரிய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் தற்போதும் தாக்குதல் தொடர்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதல் குறித்த சேதங்கள் இது வரையில் தெரியவரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஒபரேஷன் ட்ரூ ப்ரோமிஸ்
மேலும் அமெரிக்கத் தளபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கான இரகசியக் கூடும் இடத்தை தாக்குவதற்காக, ஐ.ஆர்.ஜி.சி படைகள் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், ஏராளமான ட்ரோன்களையும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) மக்கள் தொடர்பு அலுவலகம், 'ஒபரேஷன் ட்ரூ ப்ரோமிஸ் 4'-இன் 'அலை 97' குறித்த விவரங்களை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில் மேற்கண்ட விடயத்தை அடிகோடிட்டுள்ளது. IRGC கடற்படையால் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையானது, பாரசீக வளைகுடா மற்றும் அண்டை கடலோர நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய மூலோபாய நலன்களுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான, ஒருங்கிணைக்கப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை உள்ளடக்கியது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.ஆர்.ஜி.சி-யின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை எரிசக்தி அமைச்சகம் மற்றும் தவானிர் (ஈரானின் சிறப்பு அனல் மின் நிறுவனம்) ஆகியவற்றின் ஊழியர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்று கூறியுள்ளது.
குவைத்தில் உள்ள முகமது அல்-அஹ்மத் கடற்படைத் தளத்திற்கு அருகில், அமெரிக்கத் தளபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கான இரகசியக் கூடும் இடத்தை தாக்குவதற்காக, ஐ.ஆர்.ஜி.சி படைகள் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், ஏராளமான ட்ரோன்களையும் பயன்படுத்தியதாக அறிக்கை குறிப்பட்டுள்ளது.
இந்தத் துல்லியமான தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான நோய் காவு வண்டி சேவைகள் காணப்பட்டதாகவும், இது குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளைச் சுட்டிக்காட்டுவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |