அதிரும் செங்கடல்! அமெரிக்கக் கப்பல்களைக் குறிவைக்கும் ஈரானின் CM-302 ஏவுகணைகள்
மத்திய கிழக்கின் போர்ப்பதற்றம் தற்போது செங்கடல் பிராந்தியத்தில்தான் ஆரம்பிக்கப்போகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானிய தயாரிப்பான CM-302 ஏவுகணைகள் அமெரிக்கக் கடற்படைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
குறிப்பாக ஒலியின் வேகத்தை விட அதிவேகமாகச் சென்று இலக்கைத் தாக்கக்கூடிய இந்த அதிநவீன ஏவுகணைகள் யேமனில் உள்ள அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்களிடம் சிக்கியுள்ளதாகவும் அவை கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைத்து ஏவப்படுவதால் பெரும் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.
இதேவேளை, செங்கடல் பகுதியில் நிலவும் தற்போதைய மோதல் சூழலில், ஈரானின் இந்த ஏவுகணைத் தொழில்நுட்பம் அமெரிக்கப் படைகளுக்கு 'மரண பயத்தை' காட்டி வருவதாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஏவுகணைகளின் துல்லியமான தாக்குதல் திறன் மற்றும் வேகத்தை எதிர்கொள்வதில் உள்ள சவால்கள் காரணமாக, செங்கடல் பிராந்தியம் தற்போது கடும் பதற்றமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடும் நிலையில் இது தொடர்பில் ஒரு ஆழமான பார்வையை செலுத்துகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |