அமெரிக்காவின் தொடர் அழுத்தம் : கொள்கையில் இருந்து மாறாத ஈரான்
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரான் தனது நிலைப்பாட்டை எவ்விதத்திலும் மாற்றிக்கொள்ளவில்லை என தெஹ்ரானைச் சேர்ந்த ஆய்வாளர் அப்பாஸ் அஸ்லானி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள போரின் பின்னணியில், இந்த நெறிமுறைகளைத் தங்களால் செயற்படுத்த முடியும் என்று ஈரான் நம்புவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா புதிய முற்றுகையை தொடங்கி ஈரானின் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க விரும்புவதாக தெரிவித்தார்.
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை
ஆனால், ஈரான் தமது கொள்கையை மாற்றிக்கொள்ளப் போகிறது என்பதற்கான எந்தவொரு அறிகுறியும் அல்லது சமிக்ஞையும் ஈரானிய தரப்பிலிருந்து இதுவரை தென்படவில்லை என அப்பாஸ் அஸ்லானி வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையினால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக இராஜதந்திர ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போதைய நடவடிக்கை காரணமாக, டரம்ப் எந்தவொரு மாபெரும் வெற்றியையும் பெறவில்லை என, அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் முன்னாள் துணை உதவிச் செயலாளர் டேவிட் செட்னி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த முற்றுகையின் மூலம் தன் மீதான அழுத்தத்தை அவரே அதிகரித்துக் கொண்டுள்ளதாக செட்னி குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |