நேரடிப் போராக உருவெடுத்த பல தசாப்த கால நிழல் யுத்தம்...! பற்றி எரியும் மத்திய கிழக்கு
பல தசாப்த காலங்களாகத் திரைமறைவில் அரங்கேறி வந்த நிழல் யுத்தம், இன்று பகிரங்கமான நேரடிப் போராக உருவெடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஒருங்கிணைந்து ஈரான் மீது நடத்தியுள்ள அதிரடி வான்வழித் தாக்குதல்கள், சர்வதேச அரங்கில் பெரும் பதற்றத்தை விதைத்துள்ளன.
இந்தத் தாக்குதல்களில், ஈரானின் ஆன்மீக மற்றும் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இது அந்நாட்டு ஆட்சிக் கட்டமைப்பில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகவும், மிகப்பெரிய அரசியல் அதிர்வலையாகவும் பார்க்கப்படுகிறது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் தனது ஏவுகணை மற்றும் ட்ரோன் படைகளை வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேலிய நகரங்களை நோக்கி ஏவியுள்ளது.
இந்தத் தீவிரத் தாக்குதல்கள் மத்திய கிழக்கின் அமைதியை முற்றாகச் சிதைத்துள்ளன.
யுத்தத்தின் தீப்பொறி அண்டை நாடுகளான துபாய் மற்றும் பஹ்ரைன் வரை பரவியுள்ள நிலையில், இது ஒரு முழுமையான பிராந்தியப் போராக (Regional War) மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மறுபுறம், ஐக்கிய நாடுகள் அவை இந்தத் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு குறித்து உலக நாடுகளை அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கும் அழைத்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த போர்க்காலச் சூழலின் தற்போதைய நிலவரம் குறித்து விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி....!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |