இஸ்ரேல் மீது 10ஆவது அலை ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்த ஈரான்
இஸ்ரேல் மீது 10ஆவது அலை ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது.
இது குறித்த பகுதியில் உள்ள மக்களிடையே எதிர்பார்ப்பு மற்றும் பதற்றத்தின் அளவை உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் மட்டுமல்ல, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் கூட குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் தலைமையிலான தாக்குதல்
இஸ்ரேல் மீது ஈரான் தலைமையிலான தாக்குதல்கள் இரவில் அதிகம் நடைபெறவில்லை என்றும், இருப்பினும், காலையிலிருந்து, ஈரானில் இருந்து கடுமையான குண்டுவீச்சுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஈரானிய ஊடகங்கள் விளக்கியுள்ளன.

மேற்கு ஜெருசலேமுக்கு அருகிலுள்ள இஸ்ரேலிய நகரமான பெய்ட் ஷெமேஷில் இடம்பெற்ற தாக்குதலின் விளைவாக ஒன்பது இஸ்ரேலியர்கள் பலியானதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த சண்டையுடன் ஒப்பிடும்போது அதிக இஸ்ரேலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது இஸ்ரேலை குறிவைத்து மேற்கொள்ளும் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலின் தீவிரத்தைக் குறிக்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |