ஈரானுடனான போர்நிறுத்தம்! அமெரிக்கா வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு
மத்திய கிழக்கில் போர் நீடித்து வரும் சூழலில், ஈரானிய தரப்புடன் பேச்சுவார்த்தையாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இருப்பினும், தற்போதைய போர்ச் சூழலுக்கு மத்தியில் ஈரான் தனது தலைமைத்துவக் கட்டமைப்பைச் சீரமைப்பதில் பெரும் போராட்டத்தை எதிர்நோக்கி வருவதாக வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு
ஈரானுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில் விடுத்த கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தியோகபூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.

Image Credit: The PIE News
அமெரிக்க ஊடகங்களுக்கு இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் அன்னா கெல்லி, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கும் ஒரு உடன்படிக்கையை மட்டுமே ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்றுக்கொள்வார் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரான் ஒப்பந்தம்
ஈரானுடன் எத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக இருந்தாலும், அது அமெரிக்காவின் நலன்களை எவ்விதத்திலும் விட்டுக் கொடுக்காத வகையில் அமையும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் ஈரான் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என அச்சுறுத்தும் வகையில் பதிவிட்டிருந்த பின்னணியில், வெள்ளை மாளிகையின் இந்த அறிக்கை அமெரிக்காவின் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |