பேச்சுவார்த்தைகளைத் தொடர ஈரான் தயார்! பெசெஷ்கியன் அறிவிப்பு
அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஈரான் தயாராக இருப்பதாகவும், தர்க்கரீதியான விவாதங்கள் மற்றும் இராஜதந்திரமே சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தங்களின் விருப்பமான வழி என்றும் அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுடன் நடத்திய உரையாடலின் போது அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு அழுத்தம்
அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் எதற்கும் உதவாது என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய போக்குகள் அமெரிக்கா தானாகவே உருவாக்கிக்கொண்ட சிக்கல்களை மேலும் மோசமாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

Image Credit: Time Magazine
மேலும், சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அமெரிக்கா முறையாகப் பின்பற்றுவதற்கு ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் பெசெஷ்கியன் மேக்ரானிடம் வலியுறுத்தியுள்ளார்.
இராஜதந்திர முயற்சி
வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், அமைதியை நிலைநாட்ட இராஜதந்திர முயற்சிகளுக்கு ஈரான் முன்னுரிமை அளிப்பதையே பெசெஷ்கியனின் இந்த கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன.

அதே நேரத்தில், தங்களுக்கு எதிரான பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தங்கள் ஆக்கபூர்வமான தீர்வுக்கு வழிவகுக்காது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |