மத்திய கிழக்கு பதற்றத்தை தணிக்க முன்வந்த சீனா! ஜின்பிங் வகுத்துள்ள திட்டம்
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான நான்கு அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் உடனான சந்திப்பின் போது அவர் இந்தத் திட்டத்தை பகிர்ந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைதியான சகவாழ்வு, தேசிய இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டவிதிமுறைகளின் அவசியத்தை அதில் சீன ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச அரசியல்
அதன்போது, மத்திய கிழக்கில் உள்ள வளைகுடா நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை உண்மையான மனதுடன் மதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை ஒருங்கிணைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Image Credit: Asia Society
இதேவேளை, வளைகுடா பகுதியில் நிலவும் தற்போதைய பதற்றங்களுக்கு மத்தியில், நாடுகளின் எல்லைப் பாதுகாப்பிலும் தன்னாட்சியிலும் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என்ற சீன ஜனாதிபதியின் இந்த கருத்து சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெறுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |