ஈரானின் புதிய இராணுவ திறன்கள்! புரட்சிகர காவல்படை விடுத்த கடும் எச்சரிக்கை
ஈரான் மீதான போர் தொடருமானால், தங்களின் புதிய ராணுவத் திறன்கள் எதிரிகளை நிலைகுலையச் செய்யும் என்று புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து திங்கட்கிழமை கருத்து தெரிவித்துள்ள அந்தப் படையின் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் ஹொசைன் மொஹெபி, ஈரான் தன்னிடம் உள்ள பல மேம்பட்ட ராணுவத் திறன்களை இன்னும் வெளிப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனவே போர் நீடித்தால் எதிரிகளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிலான புதிய ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஈரான் வெளிப்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
புதிய போர் முறைகள்
எதிரிகள் இதுவரை எதிர்கொள்ளாத புதிய போர் முறைகளை ஈரான் கையாளத் தயாராக இருப்பதாகவும், அத்தகைய நவீன அணுகுமுறைகளை சமாளிக்கும் திறன் எதிரி நாடுகளுக்கு இருக்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Image Credit: tasnimnews.ir
வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் இந்த ராணுவ எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |