எரிபொருள் தடை நீக்கம் அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி
சர்வதேச சந்தைக்குக் மேலதிக கச்சா எண்ணெயை வழங்குவதற்கு தங்களிடம் கையிருப்பு எதுவுமில்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களை ஈரான் தாக்கி வருகிறது. இதனால் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல்
அதே சமயம் கத்தார், சவூதி அரேபியா நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெயை விலை உயர்வை கட்டுப்படுத்த, கடலில் முடங்கியுள்ள ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை 30 நாட்களுக்கு நீக்குவதாக அமெரிக்கா அறிவித்தது.
கையிருப்பு ஏதுமில்லை
இந்நிலையில், சர்வதேச சந்தைக்குக் கூடுதல் கச்சா எண்ணெயை வழங்குவதற்குத் தங்களிடம் கையிருப்பு ஏதுமில்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

image credit - Business Today
ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவதாக அமெரிக்கா அறிவித்த நிலையில், ஈரான் அரசு அச்சலுகையை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |