அமெரிக்காவிற்கு பேரிழப்பு : சுட்டு வீழ்த்தப்பட்ட மேலும் மூன்று வானூர்திகள்
புதிய இணைப்பு
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் இரண்டாவது விமானியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்காவின் மற்றுமொரு விமானத்தையும் இரண்டு உலங்கு வானூர்திகளையும் சுட்டுவீழ்த்தியுள்ளதாக ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று (05) தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் விளைவாகப் பல எதிரி விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும், இதன் விளைவு அமெரிக்காவிற்கு ஏற்பட்ட மற்றொரு அவமானகரமான தோல்வி என்று கூறிய அவர் மேலும், 1980 ஏப்ரலில் தோல்வியடைந்த 'ஒபரேஷன் ஈகிள் கிளா' உடன் இதை ஒப்பிட்டார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில் இரண்டு பிளாக் ஹாக் உலங்குவானூர்திகள் மற்றும் ஒரு C-130 இராணுவப் போக்குவரத்து விமானம் ஆகியவை அடங்கும் என்றும், அவை அனைத்தும் தெற்கு இஸ்பஹானில் தாக்கப்பட்டு எரிந்த நிலையில் விடப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்த நிலையில் மத்திய ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானங்களின் படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




இரண்டாம் இணைப்பு
ஈரானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானத்தின் சிதைவுகளைக் காட்டுவதாகக் கூறப்படும் ஒரு புகைப்படத்தை, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா இதுபோன்று மேலும் மூன்று வெற்றிகளைப் பெற்றால், அது முற்றிலுமாக அழிந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்.
If the United States gets three more victories like this, it will be utterly ruined. 👏 pic.twitter.com/jutDghVrjz
— محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) April 5, 2026
முதலாம் இணைப்பு
ஈரானின் இஸ்பஹான் மாகாணத்திற்கு அருகே அமெரிக்காவின் C-130 ரக வானூர்தியை தமது படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக ஈரானின் 'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரானின் 'ஃபராஜ் ரேஞ்சர்ஸ்' (Faraj Rangers) என்ற காவல்துறை கமாண்டோ பிரிவினரால் இந்த அமெரிக்க வானூர்தி தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாயமான அமெரிக்க விமானப்படை வீரரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஏனைய போர் விமானங்களுக்கு, இந்த C-130 வானூர்தி வான்பரப்பில் வைத்து எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்ததாக (Refuelling) ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
விமானியைத் தேடும் பணி
ஈரானின் புனித மண்ணை ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்களுக்குத் துணை நின்ற காரணத்தினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஒரு F-15E போர் வானூர்தி வீழ்த்தப்பட்டு, அதன் ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில், மற்றுமொரு வீரரைத் தேடும் பணியின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த C-130 விமானம் வீழ்த்தப்பட்டமை குறித்து அமெரிக்கத் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |