ஈரான் தாக்குதல் எதிரொலி இருளில் மூழ்கியது இஸ்ரேல்
ஈரானின்(iran) ஏவுகணைத் தாக்குதலை அடுத்து இஸ்ரேலில் சுமார் 8,000 பேர் மின்சாரம் இல்லாமல் தவிப்பதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
அதிகாரிகள் "மின்சார நிறுவல்களுக்கு சேதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு முன்கூட்டியே தயாராக இருந்தனர்" என்றும் மூன்று மணி நேரத்திற்குள் மின்சாரம் திரும்பப் பெற இலக்கு வைத்துள்ளனர் என்றும் அமைச்சர் எலி கோஹன் தெரிவித்தார்.
முக்கிய உள்கட்டமைப்பிற்கு சேதம்
இஸ்ரேல் மின்சார சபை (IEC) முன்னதாக தெற்கில் "ஒரு மூலோபாய உள்கட்டமைப்பு வசதிக்கு அருகில் சேதம்" ஏற்பட்டதாக அறிவித்தது, இது பல சமூகங்களில் மின்வெட்டுக்கு வழிவகுத்தது.
விரைவில் வழமைக்கு திரும்பும் மின் விநியோகம்
"விரைவில் மின் விநியோகத்தை சீர் செய்யும் நோக்கத்துடன் இஸ்ரேல் மின்சார சபையினர் (IEC) பல இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். உள்கட்டமைப்பு பழுதுபார்ப்பு மற்றும் பாதுகாப்பு அபாயங்களை நடுநிலையாக்குதல் ஆகியவை அவர்களின் நடவடிக்கைகளில் அடங்கும், மேலும் இந்த செயற்பாடு பாதுகாப்புப் படைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுகின்றன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
