ஈரானின் நிலத்தடி ஏவுகணை நகரம்! பயங்கர ஆயுதங்களுடன் வெளியான காணொளி
ஏவுகணை நகரம் எனப்படும் நிலத்தடி சுரங்கத்தில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் காணொளியொன்றை ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பெருமளவில் தற்கொலை கடற்படை ட்ரோன் படகுகளை கையிருப்பில் வைத்துள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள அறிவிப்பை தொடர்ந்து இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
கடற்படை ட்ரோன்கள்
அந்த காட்சிகளில் நீண்ட நிலத்தடி சுரங்கங்கள் முழுவதும் கடற்படை ட்ரோன்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கடல் குண்டுகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.
Iran published footage of underground tunnels stocked with naval drones, anti-ship missiles, and sea mines. Reuters reported, citing US officials, that Iran has mined the Strait of Hormuz with dozens of sea mines. #Iran pic.twitter.com/Kcwp5UqkXq
— NOELREPORTS 🇪🇺 🇺🇦 (@NOELreports) March 11, 2026
மேலும், சில காட்சிகளில் இந்த ஆயுதங்கள் ஏவப்படுவதும் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த காணொளிகள் எப்போது பதிவு செய்யப்பட்டவை என்பதும், அந்த இடம் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளானதா என்பது தொடர்பிலும் தெளிவான தகவல்கள் இல்லை.
வெளியான காணொளிகளில் ஒன்றில், அலி கமேனியின் உருவப்படம் கீழ் ட்ரெய்லரில் பொருத்தப்பட்ட கடற்படை ட்ரோன் ஒன்று நிலத்தடி சுரங்கத்தில் இருப்பதும் காணப்படுகிறது.
கப்பல்கள் மீதான தாக்குதல்
ஆளில்லா மேற்பரப்பு வாகனங்கள் (USV)” எனப்படும் இந்த கடற்படை ட்ரோன்கள் ஏற்கனவே பாரசீக வளைகுடாவில் இரண்டு எண்ணெய் கப்பல்களை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயன்ற போது குறித்த கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தண்ணீரின் மேற்பரப்பில் அல்லது அதன் கீழே பயணிக்கும் இந்த சிறிய ட்ரோன் படகுகள் வெடிபொருட்களால் நிரப்பப்பட்டு, இலக்கை மோதும் தருணத்தில் வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |