போருக்குள் புகும் ஐரோப்பிய ஒன்றியம்! ஈரான் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை
அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடுவதற்கு எதிராக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவுடனான தொலைபேசி உரையாடலின் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதன்போது, அந்த அமைப்பின் நிலைப்பாடு ஒருதலைப்பட்சமானது மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று ஈரானிய ஜனாதிபதி விமர்சித்ததாக கூறப்படுகிறது.
கடுமையான விளைவுகளுக்கான எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆட்சியின் தாக்குதல்களை சட்ட நெறிகள் மற்றும் சர்வதேச கொள்கைகளின் அப்பட்டமான மீறல் எனவும் அவர் கூறியுள்ளார்.

Image Credit: NBC News
அத்தோடு, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுவிட்டது என்றும், ஆக்கிரமிப்பு நாடுகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்களுடன் தொடர்புடைய கப்பல்கள் அணுக முடியாதபடி அது தொடர்ந்து இருக்கும் என்றும் பெஷெஷ்கியன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், எந்தவொரு வெளித் தலையீடும் கடுமையான மற்றும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா - இஸ்ரேலின் விரோத நடவடிக்கை
அதன்படி, ஈரான் மீதான எதிர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமற்ற அணுகுமுறையைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டை வளர்க்கும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலான கொள்கைகளை ஐரோப்பிய நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Image Credit: PBS
இதேவேளை, ஈரான் ஆக்கப்பூர்வமான ராஜதந்திரத்தில் ஈடுபட்டிருந்தாலும், பேச்சுவார்த்தைகளின் போது அது குறிவைக்கப்பட்டது என்றும், ஆக்கிரமிப்பாளர்கள் பேச்சுவார்த்தையை விட அழுத்தத்தையே விரும்புகிறார்கள் என்றும் ஈரானிய ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் உள்ளார்ந்த தற்காப்பு உரிமையை மீண்டும் உறுதிப்படுத்திய பெஷெஷ்கியன், குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை தொடர்பான தற்போதைய பிராந்திய ஸ்திரமின்மை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் விரோத நடவடிக்கைகளின் நேரடி விளைவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு
இவ்வாறானதொரு பின்னணியில், ஈரானுக்கு எதிரான அழிவுகரமான போக்கைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, ஐரோப்பிய நாடுகள் தங்கள் கொள்கைகளை சர்வதேச சட்டத்துடன் சீரமைக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Image Credit: LSM
இந்த நிலையில், மேற்படி கூற்றுகளுக்கு பதில் அளித்த ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, இந்த மோதலின் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று விவரித்த அவர், ஐரோப்பிய நாடுகள் அதை ஆதரிக்கவில்லை என்றும், அமைதியான, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகள் காண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்