இஸ்ரேலின் முக்கிய விமான நிலையத்தை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்
இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை ஈரானிய ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை (Ben Gurion Airport) மற்றும் அங்கு இல்லாத ஒரு இஸ்ரேலிய வான் படை தளத்தை (27வது ஸ்குவாட்ரன் பேஸ்) குறிவைத்து, 1 தொன் போர்முனை கொண்ட கோர்ராம்ஷஹர்-4 (Khorramshahr-4) பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக அறிவித்துள்ளது.
இது "ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4" (Operation True Promise 4) இன் 19வது அலை தாக்குதலின் ஒரு பகுதியாகும்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படை
இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) அறிக்கையின்படி, அனைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளும் அவர்களின் வான் பாதுகாப்பு அமைப்புகளான ஐரன் டோம் (Iron Dome), டேவிட்ஸ் ஸ்லிங் (David's Sling) மற்றும் அரோ (Arrow) ஆகியவற்றால் இடைமறிக்கப்பட்டன.

ஒரு ஏவுகணை மட்டும் மத்திய இஸ்ரேலில் ஒரு திறந்தவெளிப் பகுதியில் விழுந்ததாகவும், ஆனால் பென் குரியன் விமான நிலையத்தில் எந்த சேதமோ அல்லது நேரடி தாக்குதலோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |