ஈரான் மக்களின் போராட்டம் : அமெரிக்காவின் நிலைப்பாடு வெளியானது
தங்களின் உரிமைகளுக்காக போராடும் ஈரான் மக்களுக்கு ஆதரவாக தாங்கள் துணை நிற்போமென அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈரானில் அமைதியாக போராடும் மக்களை சுட்டுக் கொன்றால் அமெரிக்கா அவர்களுக்கு துணையாக களத்தில் இறங்கும் என்று கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த கமேனி, ஈரான் அழுத்தங்களுக்கு அடிபணியாது என்றார்.
ஈரான் மக்கள் மீதான அக்கறையில் எடுக்கப்படவில்லை
இதனிடையே வியாழக்கிழமை காலை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”ஈரான் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை கண்டிக்கிறோம். இத்தகைய நிலைப்பாடு ஈரான் மக்கள் மீதான அக்கறையில் எடுக்கப்படவில்லை. வன்முறை மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்டி, ஈரானில் அமைதியின்மையையும் பாதுகாப்பின்மையையும் உருவாக்கும் நோக்கம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ்,
நாங்கள் துணையாக நிற்போம்
“தங்களின் உரிமைகளுக்காக அமைதியான போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கும், சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கும் நாங்கள் துணையாக நிற்போம்.

ஈரான் ஆட்சிக்கு பல பிரச்னைகள் இருக்கின்றன. அணுசக்தித் திட்டம் தொடர்பாக உண்மையான பேச்சுவார்த்தையை அமெரிக்காவுடன் நடத்த வேண்டும்.
எதிர்காலத்தில் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றி ஜனாதிபதியே தெரிவிப்பார். ஆனால், ஈரான் உட்பட உலகம் முழுவதும் உரிமைகளுக்காக போராடும் எவருடனும் அமெரிக்கா துணை நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜனவரி 10... உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை : தனிநாடு குறித்து சிந்தித்த ஈழத் தமிழர்கள்...! 1 மணி நேரம் முன்
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும்
18 மணி நேரம் முன்